வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்
'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்', 'நாம் உங்களை ஒரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்'என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்;.
தன் வரலாற்றை அறியாதவன் வரலாறு படைப்பதில்லை.
இவ்வுலகம் படைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களுக்கென்று ஒரு நீண்ட நெடியதொரு பாரம்பரியமும், வரலாறும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளதை நபிமார்களின் சரிதைகள் வாயிலாக திருமறை குர்ஆன் தெளிவாகவே உணர்த்துகிறது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட முதல் மனிதர்களான ஆதம் (அலை)-ஹவ்வா (அலை) அவ்விருவரும் முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தார்கள். எனவே முஸ்லிம்களின் வரலாறும் இவ்வுலகின் முதல் மனித ஜோடியிலிருந்தே தோன்றுகிறது.