WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



வெள்ளி, 20 ஏப்ரல், 2012

127 பயணிகளுடன் பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்!





on 20 April 2012.
சுமார் 127 பயணிகளுடன் பறந்துகொணடிருந்த பயணிகள் விமானமொன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. போஜா எயார் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. (இரண்டாம் இணைப்பு!)

எனினும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹுஸைன் அபாத் கிராமத்தில் இவ்விமானம் வீழ்ந்ததாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான பஸ்ல் அக்பர் தெரிவித்துள்ளார்.




விமானம் விழுந்த இடம்தீப்பற்றியது. இவ்விமானம் முற்றாக அழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். தீயணைப்பு படையினரையும் மீட்புப் படையினரையும் அனுப்பிவைத்துள்ளோம். மேலும் மீட்புக்குழுக்கள் வந்துகொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.


விபத்துக்குள்ளான விமானம் 20 வருடங்கள் பழமையானது. உயிரிழந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படை வீரர்களும் பொலிஸின் மீட்ப்புப் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.


விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் சோகத்துடன் ஒன்று கூடியுள்ளனர்.


பாகிஸ்தான் பொலிஸின் மீட்புப் படையைச் சேர்ந்த Saifur Rehman உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், Hussain Abad என்ற கிராமத்துக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போதே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த கிராமமானது இஸ்லாமாபாத் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. தீ விபத்தின் பின்னர் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


தீயால் விமானம் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள மலைகளுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போது 152 பயணிகளுடன் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய பின்னர் ஏற்பட்ட பாரிய விபத்தாக இன்றைய விபத்து அமைந்துள்ளது.

News : Source

eutamilar.eu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக