சுமார் 127 பயணிகளுடன் பறந்துகொணடிருந்த பயணிகள் விமானமொன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. போஜா எயார் விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நகருக்கு சென்றுகொண்டிருந்தது. (இரண்டாம் இணைப்பு!) |
எனினும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஹுஸைன் அபாத் கிராமத்தில் இவ்விமானம் வீழ்ந்ததாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான பஸ்ல் அக்பர் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்த இடம்தீப்பற்றியது. இவ்விமானம் முற்றாக அழிந்துள்ளது என அவர் கூறியுள்ளார். தீயணைப்பு படையினரையும் மீட்புப் படையினரையும் அனுப்பிவைத்துள்ளோம். மேலும் மீட்புக்குழுக்கள் வந்துகொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான விமானம் 20 வருடங்கள் பழமையானது. உயிரிழந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படை வீரர்களும் பொலிஸின் மீட்ப்புப் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் சோகத்துடன் ஒன்று கூடியுள்ளனர்.
பாகிஸ்தான் பொலிஸின் மீட்புப் படையைச் சேர்ந்த Saifur Rehman உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், Hussain Abad என்ற கிராமத்துக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போதே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கிராமமானது இஸ்லாமாபாத் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. தீ விபத்தின் பின்னர் விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. இதனை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயால் விமானம் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்லாமாபாத்தில் உள்ள மலைகளுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த போது 152 பயணிகளுடன் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய பின்னர் ஏற்பட்ட பாரிய விபத்தாக இன்றைய விபத்து அமைந்துள்ளது.
News : Source
eutamilar.eu thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக