திருவொற்றிïர், மே. 21-
எர்ணாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ். ஐ.டி.சி. கம்பெனி அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி வீடு உள்ளது. எர்ணாவூர் பகுதி வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். கனகராஜ் தனது கடைக்கு அருகே புதிதாக டிபார்ட் மெண்ட் ஸ்டோர் கட்டி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் மனைவி மகளுடன் கனகராஜ் வீட்டில் இருந்தார்.
அப்போது இன்னாவோ காரில் 4 வாலிபர்கள் அவரது வீட்டு முன் வந்து இறங்கினார்கள். அனைவரும் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து இருந்தனர். ஒருவர் மட்டும் தொப்பி அணிந்து இருந்தார். மிடுக்காக இருந்த அவர்கள் மளமளவென்று கனகராஜ் வீட்டுக்குள் புகுந்தனர்.
நாங்கள் வருமான வரி அலுவலகத்தில் இருந்து வந் துள்ளோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும்'' என்று கூறினார்கள். "உங்களது அடையாள அடையாள காட்டுங்கள்'' என்று கனகராஜ் கேட்டார். உடனே 4 பேரில் ஒருவர் ஐ.டி. கார்டை காட்டினார். அதைப் பார்த்ததும் அவர்கள் வருமான வரி அதிகாரி என கனகராஜ் நம்பினார்.
உடனே 4 பேரும் கனகராஜ் வீட்டு வாசல், ஜன்னல் கதவை மூடினர். சோபாவில் அமர்ந்த அவர்கள் கனகராஜிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். பின்னர் ஒருவர் "உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது'' என்று கேட்டார். அதற்கு கனகராஜ் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள், "நீங்களாக எடுத்துக் கொடுத்தால் நல்லது. நாங்கள் தேடி கண்டு பிடித்தால் சிக்கலாகி விடும்'' என்று மிரட்டினர். உடனே கனகராஜ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அமைப்பதற்காக வங்கியில் எடுத்து வைத்திருந்த ரூ. 43 லட்சம் பணத்தையும் தன்னிடம் இருந்த 110 பவுன் நகையையும் காட்டினார்.
பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் நகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்துக்கு மட்டும் உரிய கணக்கு காட்டி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு ஒரு செல்போன் நம்பரை கொடுத்தனர்.
பின்னர் 4 பேரும் காரில் ஏறி புறப்பட்டனர். 4 வாலிபர்களும் சென்ற பின்னர் கனகராஜ் அவர்கள் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பல நேரம் தொடர்பு கொண்டும் கிடைக்காததால் வருமான வரி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினார். நாங்கள் யாரும் சோதனைக்கு வரவில்லை என்று வருமான வரி அலுவலகத்தில் கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்ற திசையை நோக்கிப் போய் தேடினார். ஆனால் அந்த 4 பேரும் ரூ. 43 லட்சத்துடன் காரில் தப்பி விட்டனர்.
மோசம் போனதை உணர்ந்த கனகராஜ் எண்ணூர் உதவி கமிஷனர் செல்வ அரசுவிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைரேகை நிபுணர்கள் கனகராஜ் வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நூதன கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாவூரைச் சேர்ந்தவர் கனகராஜ். ஐ.டி.சி. கம்பெனி அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி வீடு உள்ளது. எர்ணாவூர் பகுதி வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். கனகராஜ் தனது கடைக்கு அருகே புதிதாக டிபார்ட் மெண்ட் ஸ்டோர் கட்டி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் மனைவி மகளுடன் கனகராஜ் வீட்டில் இருந்தார்.
அப்போது இன்னாவோ காரில் 4 வாலிபர்கள் அவரது வீட்டு முன் வந்து இறங்கினார்கள். அனைவரும் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து இருந்தனர். ஒருவர் மட்டும் தொப்பி அணிந்து இருந்தார். மிடுக்காக இருந்த அவர்கள் மளமளவென்று கனகராஜ் வீட்டுக்குள் புகுந்தனர்.
நாங்கள் வருமான வரி அலுவலகத்தில் இருந்து வந் துள்ளோம். உங்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும்'' என்று கூறினார்கள். "உங்களது அடையாள அடையாள காட்டுங்கள்'' என்று கனகராஜ் கேட்டார். உடனே 4 பேரில் ஒருவர் ஐ.டி. கார்டை காட்டினார். அதைப் பார்த்ததும் அவர்கள் வருமான வரி அதிகாரி என கனகராஜ் நம்பினார்.
உடனே 4 பேரும் கனகராஜ் வீட்டு வாசல், ஜன்னல் கதவை மூடினர். சோபாவில் அமர்ந்த அவர்கள் கனகராஜிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். பின்னர் ஒருவர் "உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது'' என்று கேட்டார். அதற்கு கனகராஜ் பணம் எதுவும் இல்லை என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள், "நீங்களாக எடுத்துக் கொடுத்தால் நல்லது. நாங்கள் தேடி கண்டு பிடித்தால் சிக்கலாகி விடும்'' என்று மிரட்டினர். உடனே கனகராஜ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அமைப்பதற்காக வங்கியில் எடுத்து வைத்திருந்த ரூ. 43 லட்சம் பணத்தையும் தன்னிடம் இருந்த 110 பவுன் நகையையும் காட்டினார்.
பணத்தை வாங்கி கொண்ட அவர்கள் நகையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்துக்கு மட்டும் உரிய கணக்கு காட்டி அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு ஒரு செல்போன் நம்பரை கொடுத்தனர்.
பின்னர் 4 பேரும் காரில் ஏறி புறப்பட்டனர். 4 வாலிபர்களும் சென்ற பின்னர் கனகராஜ் அவர்கள் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. பல நேரம் தொடர்பு கொண்டும் கிடைக்காததால் வருமான வரி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினார். நாங்கள் யாரும் சோதனைக்கு வரவில்லை என்று வருமான வரி அலுவலகத்தில் கூறினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் உடனே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 4 பேர் சென்ற திசையை நோக்கிப் போய் தேடினார். ஆனால் அந்த 4 பேரும் ரூ. 43 லட்சத்துடன் காரில் தப்பி விட்டனர்.
மோசம் போனதை உணர்ந்த கனகராஜ் எண்ணூர் உதவி கமிஷனர் செல்வ அரசுவிடம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கைரேகை நிபுணர்கள் கனகராஜ் வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நூதன கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக